மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - தமிழ்நாடு.
வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றால் ஆனதுதான் இந்த பிரபஞ்சம். இந்த பூமி பிரபஞ்சத்தின் இயக்கமும் இதை சார்ந்தே இருக்கிறது. உலக உருண்டையை சுற்றி பார்த்தால் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை எண்ணி பார்க்க முடியும். ஆனால் உலகின் மொத்த நிலப்பரப்பில் 80 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
மொத்த நாடுகளின் நிலப்பரப்பு 20 சதவீதம்தான். உலகை சூழ்ந்துநிற்கும் தண்ணீரில் 97 சதவீதம் உப்பு தண்ணீர். வெறும் 3 சதவீதம்தான் நல்ல தண்ணீர். அதிலும் 2 சதவீதம் பனிக்கட்டியாய் பயன்படுத்த தகுதியற்று கொட்டிகிடக்கிறது.
குடிநீர், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் 1 சதவீத தண்ணீர்தான் இருக்கிறது. ஒரு சதவீத நீர் ஆதாரத்தை வைத்துதான் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் வாழ்கிறது. ஆனால் மாறிவரும் தட்ப வெட்ப நிலை மாற்றங்கள் நீருக்காய் கண்ணீர் சிந்தும் காலம் வரும் என்பதை நினைவு படுத்துகின்றன.
வற்றாத ஜீவ நதிகளெல்லாம் காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது வறண்டும் விடுகிறது. தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்! தாகம் தீர்க்க தண்ணீர் தேடும் மக்கள்.
குடம் தண்ணீர் ஒரு ரூபாய்க்கு விற்றது ஒரு காலம். இன்று ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.15-க்கு வாங்கி குடிக்கும் காலத்தில் வாழ்கிறோம். உயிரினங்களின் இயக்கத்துக்கு உயிராய் இருக்கும் தண்ணீர் தேவையை எப்படி சமாளிக்க போகிறோம்? என்ற கேள்வி நம் முன் பூதாகரமாக எழுந்து நிற்கிறது.
விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நீர் ஆதாரங்கள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. ஏரி, குளமெல்லாம் பாழ்படுத்தப்படுகிறது. ஏரிகள் இருந்த இடமே தெரியாமல் வீடுகளாய், கட்டிடங்களாய் உருமாறி வருகிறது. குளக்கரை சாலை பல இருக்கிறது. ஆனால் குளத்தை காணோம். லேக் வியூ சாலைகளும் உள்ளன.
ஆனால் ஏரியை காணோம். கடலோர பகுதிகளில் அதிக அளவில் நீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீரும் உப்பு நீராய் மாறி வருகிறது. உட்புற பகுதிகளில் பல இடங்களில் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது.
மழைநீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீரை காக்க வேண்டும். ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து நீர் நிலைகளை மீட்க வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை ஓரளவு சமாளிக்க முடியும். மற்ற நகரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் நீர் ஆதாரம் குறைவு.
வட மாநிலங்களில் கங்கை, பிரம்மபுத்திரா உள்பட பல வற்றாத ஜீவ நதிகள் உள்ளன. ஆனால் சென்னையில்....? மழையை நம்பிதான் இருக்கிறோம். சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 150 லிட்டர் தண்ணீர் தேவை.
சென்னையை பொறுத்தவரை 130 லிட்டர் வழங்கப்படுவதாக மெட்ரோ வாட்டர் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. கிருஷ்ணா நதிநீர், வீராணம் தண்ணீர் என்று தொலை தூரத்தில் இருந்துதான் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. எனவே தண்ணீர் சிக்கனம் இன்றியமையாதது.
‘டேப்பை’ திறந்து வைத்து கொண்டு ஹாயாக நின்று பல்துலக்குவது, முகச்சவரம் செய்வது முதல் எல்லா தேவைகளுக்கும் தேவையான அளவு தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். வீடுகள், கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். தண்ணீரை சேமிப்போம்... சிக்கனமாய் பயன்படுத்து வோம்... வரும் தலைமுறையின் கண்ணீரை துடைப்போம்.
நன்றி மாலை மலர் சென்னை 27-06-2014 (வெள்ளிக்கிழமை) பதிப்புக்கு..
வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - தமிழ்நாடு.
வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றால் ஆனதுதான் இந்த பிரபஞ்சம். இந்த பூமி பிரபஞ்சத்தின் இயக்கமும் இதை சார்ந்தே இருக்கிறது. உலக உருண்டையை சுற்றி பார்த்தால் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை எண்ணி பார்க்க முடியும். ஆனால் உலகின் மொத்த நிலப்பரப்பில் 80 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
மொத்த நாடுகளின் நிலப்பரப்பு 20 சதவீதம்தான். உலகை சூழ்ந்துநிற்கும் தண்ணீரில் 97 சதவீதம் உப்பு தண்ணீர். வெறும் 3 சதவீதம்தான் நல்ல தண்ணீர். அதிலும் 2 சதவீதம் பனிக்கட்டியாய் பயன்படுத்த தகுதியற்று கொட்டிகிடக்கிறது.
குடிநீர், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் 1 சதவீத தண்ணீர்தான் இருக்கிறது. ஒரு சதவீத நீர் ஆதாரத்தை வைத்துதான் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் வாழ்கிறது. ஆனால் மாறிவரும் தட்ப வெட்ப நிலை மாற்றங்கள் நீருக்காய் கண்ணீர் சிந்தும் காலம் வரும் என்பதை நினைவு படுத்துகின்றன.
வற்றாத ஜீவ நதிகளெல்லாம் காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது வறண்டும் விடுகிறது. தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்! தாகம் தீர்க்க தண்ணீர் தேடும் மக்கள்.
குடம் தண்ணீர் ஒரு ரூபாய்க்கு விற்றது ஒரு காலம். இன்று ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.15-க்கு வாங்கி குடிக்கும் காலத்தில் வாழ்கிறோம். உயிரினங்களின் இயக்கத்துக்கு உயிராய் இருக்கும் தண்ணீர் தேவையை எப்படி சமாளிக்க போகிறோம்? என்ற கேள்வி நம் முன் பூதாகரமாக எழுந்து நிற்கிறது.
விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நீர் ஆதாரங்கள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. ஏரி, குளமெல்லாம் பாழ்படுத்தப்படுகிறது. ஏரிகள் இருந்த இடமே தெரியாமல் வீடுகளாய், கட்டிடங்களாய் உருமாறி வருகிறது. குளக்கரை சாலை பல இருக்கிறது. ஆனால் குளத்தை காணோம். லேக் வியூ சாலைகளும் உள்ளன.
ஆனால் ஏரியை காணோம். கடலோர பகுதிகளில் அதிக அளவில் நீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீரும் உப்பு நீராய் மாறி வருகிறது. உட்புற பகுதிகளில் பல இடங்களில் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது.
மழைநீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீரை காக்க வேண்டும். ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து நீர் நிலைகளை மீட்க வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை ஓரளவு சமாளிக்க முடியும். மற்ற நகரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் நீர் ஆதாரம் குறைவு.
வட மாநிலங்களில் கங்கை, பிரம்மபுத்திரா உள்பட பல வற்றாத ஜீவ நதிகள் உள்ளன. ஆனால் சென்னையில்....? மழையை நம்பிதான் இருக்கிறோம். சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 150 லிட்டர் தண்ணீர் தேவை.
சென்னையை பொறுத்தவரை 130 லிட்டர் வழங்கப்படுவதாக மெட்ரோ வாட்டர் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. கிருஷ்ணா நதிநீர், வீராணம் தண்ணீர் என்று தொலை தூரத்தில் இருந்துதான் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. எனவே தண்ணீர் சிக்கனம் இன்றியமையாதது.
‘டேப்பை’ திறந்து வைத்து கொண்டு ஹாயாக நின்று பல்துலக்குவது, முகச்சவரம் செய்வது முதல் எல்லா தேவைகளுக்கும் தேவையான அளவு தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். வீடுகள், கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். தண்ணீரை சேமிப்போம்... சிக்கனமாய் பயன்படுத்து வோம்... வரும் தலைமுறையின் கண்ணீரை துடைப்போம்.
நன்றி மாலை மலர் சென்னை 27-06-2014 (வெள்ளிக்கிழமை) பதிப்புக்கு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக