மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.அப்பக்கோவை கீரை பற்றி தெரிந்துகொள்வோம்.
வணக்கம்.அப்பக்கோவை கீரை பற்றி தெரிந்துகொள்வோம்.
அப்பக்கோவை கீரை கொடிவகையை சார்ந்தது.
அறியகோவை எனவும் அழைக்கப்படும் இக்கீரை ஈரப்ப்பசையுள்ள இடங்களில் செழித்து
வளரும். வேலிகளில் படர்ந்து வளர்ந்திருக்கக் காணலாம். இதன் இலைகளை
கசக்கினால் ஒருவித வாசனை வரும். இதன் பூக்கள் சிறிய மஞ்சள் நிறமானவை.
அப்பக்கோவையில் கல்சியம், பொஸ்பரசு, இரும்புச்சத்து, விட்டமின் C, விட்டமின் B ஆகியவை உள்ளன.
கோவை கீரைக்கு உரிய மருத்துவ குணங்கள்
அனைத்தும் இக்கீரைக்கு உண்டு. சிறுவர்களுக்கு வரும் சளி இருமலை ஆற்றும்
சக்தி வாய்ந்தது. குழந்தைகளுக்கு சளி இருமல் இருப்பின் அப்பகோவை சாற்றை
பாலில் கலந்து சங்கில் ஊற்றிக் கொடுப்பார்கள். இயற்கை மருத்துவத்தில்
அதிகமாக பயன்படுத்தப்படும் அப்பகோவை கீரை ஒரு பயனுள்ள கீரை.
இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்
கோவையைப்
பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில்
இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு
தன்மை கொண்டது.
கோவையின் நிறத்தையும், வடிவத்தையும்
கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப்
பிரிக்கின்றனர். இதன் இலை, காய், கிழங்கு அனைத்தும் மருத்துவப்பயன்
கொண்டவை. மலர்கள் வெள்ளையாகவும் காய்கள் நீண்ட முட்டை வடிவ
வரியுள்ளவையாகவும் பழங்கள் செந்நிறமாகவும் இருக்கும். வேர் கிழங்காக வளரும்
இரத்தம் சுத்தமடைய காற்று,நீர் இவற்றின்
மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவுகளாலும் (fast food) உடலுக்குத்
தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து
குறைபாடு ஏற்படுகிறது.
மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம்
அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும்
இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது.
இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி
செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 கரண்டி அளவு தேனில் கலந்தோ அல்லது
கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும்
புத்துணர்வு பெறும்.
கண்நோய் குணமாக கண்கள் ஐம்புலன்களில்
முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும்.
உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும்.
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண்
நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி
பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண்
சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.
தோல் கிருமிகள் நீங்க தோலில் ஏற்படும்
சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத்
தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.
கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை,
வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர்
கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி
ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
உடல் சூடு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.
கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்.
சர்க்கரை நோயை கோவைக்காய் கட்டுப்படுத்துகிறது
கோவைக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
முதல் ரக சர்க்கரைநோய் இளம் வயதிலும்
வரலாம். முதிய வயதிலும் வரலாம். தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும்
கட்டாயமுள்ளது. இரண்டாம் ரக நோயாளிகள் மாத்திரை சாப்பிட்டு சர்க்கரையின்
அளவைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இது இளம் வயதில் வராது.
உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும்.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள்
இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க
முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை.
இப்படிப்பட்ட சர்க்கரை நோயாளிகள்
பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால்
சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கோவைக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த பொதுமக்கள் சுகாதாரம்
மற்றும் மருத்துவ ஆய்வுக்குழு மருத்துவர்கள் கோவைக்காயை பொடியாக்கி
சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 200-க்கும் குறைவாக உள்ள 30 புதிய சர்க்கரை
நோயாளிகளுக்கு தினமும் ஒருகிராம் கொடுத்து வந்தனர். அந்த ஒரு கிராம் பொடி,
கோவைக்காய் பச்சையாக 15 கிராம் சாப்பிடுவதற்கு சமம்.
இவ்வாறு 3 மாதம் நோயாளிகள் சாப்பிட்டனர்.
அதன் பிறகு அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப்
பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக்
கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவைக்காய் சாப்பிட்டால்
சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும்
கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவைக்காய்
நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.
நிறைய பேர் பாகற்காயை ஒதுக்குவது போல் கோவைக் காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள்.
நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல்
நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளும்
விருப்பமுடையதாகத் தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம்.
பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே
உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி
விட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப் புண் இருப்பவர்கள் வாரம் 2 நாள்
கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.
கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்க கூடாது பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.
இதர மருத்துவ பயன்கள்
கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை
மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த
சர்கரையை (Blood sugar) குணப்படுத்த வல்லது.
கோவையின் ஒரு பிடி இலையை 200 மி.லி.
நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக் காச்சிக் காலை மாலை குடித்து வர
உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவை
போகும். இதன் இலைசாறு 30 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர
மருந்து வேகம் தணியும்.
கோவைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரச் சொறி, சிரங்கு, படை, கரப்பான் ஆகியவை தீரும்.
கோவையின் பச்சைக் காய் இரண்டை தினமும் சாப்பிட்டு வர மதுமேகத்தைக் தடுக்கலாம்.
கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி
செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்றுவேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய்
குணமாகும். பச்சைக் காயை வாரம் இருமுறை பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. காலை
மட்டும் குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம்,
மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.
இயற்கை வாய்ப்புண் டானிக்
கோவைக்காய் , கோவை இலை மற்றும் கோவை பூ
இவை அனைத்தையும் ஒன்றாக ஓரு ஒருபாத்திரத்தில் எடுத்து அதில் தேவையான நீரை
சேர்த்துக்கொள்ளவும் பிறகு அதை நன்றாக கொதிக்கவைக்க வேண்டும், கொதித்த பின்
அதை வடிகட்டியால் வடிகட்டி நீரைமட்டும் எடுத்து சேகரித்து கொள்ளுங்கள்.
சுவைக்காக சிறிது தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். தேன் இல்லாதபட்சத்தில்
சர்கரையை சேர்த்துக்கொள்ளலாம். இப்பொழுது வாய்ப்புண் டானிக் தயார். இதை
சித்த வைத்தியத்தில் தீநீர் இறக்குவது என்று கூறுவார்கள்.
இந்த தீநீர் வயிற்றுப்புண் , வாய்ப்புண்
மற்றும் அல்சர் குணமாக சிறந்த டானிக்காகும். சில நேரங்களில் மற்ற நோயின்
காரணமாக மருந்துகளை சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது வேறு சில காரணங்களால் நம்
வாய் வெந்துபோய்விடும், அந்த சமயங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்ட தீநீர் செய்ய
முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. கோவைக்காய் வெறும் பச்சையாகவே
சாப்பிட்டாலேபோதும் வாய்ப்புண் விரைவில் குணமடையும். கோவை காயை பச்சையாக
சாப்பிடுவதா என்று எண்ணவேண்டாம். கோவைக்காய் பச்சையாக சாப்பிட்டால் அசல்
வெள்ளரி பிஞ்சு சுவையுடையது.
தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்
கோவைக்காய்
முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர்
போன்றவை மருத்துவ பயன் உடையவை. கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை
மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.
இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில்
இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு
நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு
நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று.
தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.
கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம்
ஏற்படுவதில்லை. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண்
ஆறிடும்.
வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு
நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன்
அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலை மற்றும் தண்டு கபத்தை
வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு கஷாயம், மார்புச்சளி,
சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும்.
இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற
தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும்.
சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த
சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால்
ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண்
விரைவில் ஆறும்