திங்கள், 25 மே, 2015

லாசிக் லேசர் கண் சிகிச்சை

         மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம். லாசிக் லேசர் சிகிச்சை பற்றி பார்ப்போம். கிட்டப் பார்வை, தூரப் பார்வை எந்த வயதிலும் வரலாம். சிறு வயதில் கண்ணாடி அணியும்போது, அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், டீன் ஏஜில், கண்ணாடி அணிவதைப் பெரும்பாலானவர்கள் விரும்புவது இல்லை. லென்ஸ் அணியலாம் என்றாலும், அதைப் பராமரிப்பது மிகவும் கடினம். நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததுதான் லாசிக் லேசர் சிகிச்சை.
நாம் பார்க்கும் பொருளின் ஒளியானது, கண்ணில் கருவிழி (கார்னியா), லென்ஸ் தாண்டி விழித்திரையில் (ரெட்டினா) விழ வேண்டும். ஒளி சரியாக விழித்திரையில் படும்போதுதான், நம்மால் அந்தப் பொருளைப் பார்க்க முடியும். அதுவே, விழித்திரைக்கு முன்னதாகவோ அல்லது அதைத் தாண்டியோ விழுந்தால், அந்தப் பொருளை நம்மால் சரியாகப் பார்க்க முடியாது. அந்தப் பொருள் மங்கலாகத் தெரியும். லாசிக் லேசர் சிகிச்சை மூலம் கருவிழியின் அமைப்பு சரி செய்யப்பட்டு, கண்ணின் பவர் பிரச்னை சாி செய்யப்படுகிறது.
நம் கண் கருவிழியின் முன்பு, தெளிவான கண்ணாடி போன்று முகப்பு உள்ளது. இதன் தடிமன் 500 மைக்ரான் (அரை மி.மீட்டர்). இதில், 100 மைக்ரோ மீட்டர் ஆழத்துக்கு வட்ட வடிவத்தில் (முழுவதும் வெட்டாமல் சில மில்லி மீட்டர்கள் விட்டு) லேசர்கொண்டு வெட்டப்பட்டு மடிக்கப்படும். இதை ஃபிளாப் என்போம். அதன்பிறகு, அந்தப் பரப்பில் லேசர் செலுத்தப்பட்டு, கருவிழியின் அளவு மறுவடிவமைப்பு செய்யப்படும். பிறகு, மடிக்கப்பட்ட பகுதியைச் சரியாகக் கண்ணின் மேற்பரப்பில்வைத்ததும், அது தானாகப் பொருத்திக்கொள்ளும்.
முதன் முதலில் லாசிக் சிகிச்சை வந்தபோது, கண்ணின் மேல் பகுதியை பிளேடால் அறுவைசிகிச்சை செய்து திறக்கப்படும். அதன்பிறகு, லேசர் ஒளி செலுத்தப்பட்டு, கருவிழியின் தடிமன் குறைக்கப்படும். பிளேடு பயன்படுத்துவதற்கு பதில் லேசரைக்கொண்டே கண்ணின் மேல்பகுதி வெட்டப்படும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று வரை இந்தச் சிகிச்சைமுறைதான் பின்பற்றப்படுகிறது.
இந்தச் சிகிச்சை மிகவும் துல்லியமானது. மிகவும் பலன் அளிக்கக்கூடியதுதான். ஆனால், இந்தச் சிகிச்சை செய்ய, கண்ணின் மேல்பகுதி வெட்டப்பட்டு, ஒட்டப்படுவதால் நரம்புகள் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட நரம்புகள் மீண்டும் வளர்ச்சியடையும் என்றாலும், அதுவரை கண்ணில், கண்ணீர் சுரத்தலில் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருந்தது. இதனால், கண் உலர்தல், எரிச்சல் போன்ற பிரச்னை ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, செயற்கைக் கண்ணீர்த் துளிகள் பயன்படுத்த வேண்டி இருந்தது. மேலும், மிகவும் அழுத்தமாக கண்ணைக் கசக்கும்போது, அந்த ஃபிளாப் நகர்ந்துவிட வாய்ப்பு உண்டு. அப்படி நகர்ந்தால், அதைச் சரி செய்ய முடியும் என்றாலும், கண்ணை மிகவும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. சிகிச்சை முடிந்து ஒருநாள் வரை கண் உறுத்தல் பிரச்னை இருக்கும். இதற்கெல்லாம் தீர்வளிக்கும் வகையில், அறிமுகம் ஆகியிருக்கிறது சிறுதுளை அறுவைசிகிச்சை ‘ஸ்மைல்’ (Small Incision Lenticule Extaction). இந்தச் சிகிச்சை முறையில், நோயாளிக்கு எந்த அளவுக்கு கருவிழியின் தடிமனைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதன் அடிப்படையில் லேசர் பயன்படுத்தி, கருவிழியின் தடிமன் குறைக்கப்படுகிறது. கண்ணின் மேல்பகுதி வழியாகவே இந்த லேசர் செலுத்தப்பட்டு கருவிழியின் தடிமன் வடிவமைக்கப்படுகிறது. இதன்பிறகு, கண்ணின் பக்கவாட்டில் சிறிய துளையிடப்பட்டு, அதன் வழியாகத் தடிமன் குறைக்கப்பட்ட கருவிழியின் திசுக்கள் வெளியே எடுக்கப்படுகின்றன.
இதனால், கண்ணில் பெரிய காயம் ஏற்படுத்தப்படுவது இல்லை. நரம்புகள் பாதிக்கப்படுவது குறைக்கப்படுகிறது. கண் உலர்தல், எரிச்சல் போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. சிகிச்சை முடிந்த சில மணி நேரத்திலேயே பார்வைத்திறன் நன்றாக இருக்கும். இரண்டு கண்களுக்கும் சேர்த்து 15 நிமிடங்களுக்கு உள்ளாக இந்த சிகிச்சையை முடித்துவிட முடியும். கோல்ட் லேசர் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுவதால், கண்ணில் வலியும் இருக்காது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் பலன் பெறலாம்.

வாழை நீர் அருந்துங்க-சிறுநீரகக் கல் காணாமல் போகும்.



மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். இதோ சிறுநீரக கல் பிரச்சினைக்கு எளிய தீர்வு

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகிருங்கள்.!
சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர். மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.
பெ.முத்துகிருஷ்ணன் >>> http://goo.gl/jj18aM படத்தில் மேலே காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார். சிறுநீர் கழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்து கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர்.
அடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது. அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.
நோண்டி எடுக்கப்பட்ட வாழை >>> http://goo.gl/MweGCq
இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.
அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும்.
நீர் நிரம்பிய நிலையில் வாழை >>> http://goo.gl/fZtBlH
அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.
மேலே நாம் கூறியது போலவே நண்பர் முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார். விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை.
இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்கும்படி கூறினோம் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வியாழன், 14 மே, 2015

சிறுதானிய உணவுத் திருவிழா-

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி 

களை கட்டிய சிறுதானிய உணவுத் திருவிழா- கலப்பட உணவு வகைகளை களையெடுக்க உறுதி


  • மாப்பிள்ளை சம்பா கொழுக்கட்டை
    மாப்பிள்ளை சம்பா கொழுக்கட்டை
  • கேழ்வரகு லட்டு
    கேழ்வரகு லட்டு
  • குதிரைவாலி பிரியாணி
    குதிரைவாலி பிரியாணி
நாகரிகம் என்கிற பெயரில் உணவு வகைகளில், செயற்கை மற்றும் கலப் படங்கள் கலந்து துரித உணவு கலாச்சாரம் பெருகிவரும் கால கட்டம் இது.
இத்தகைய சூழலில் மக்களுக்கு புரதச் சத்துகள் நிறைந்த சிறுதானிய உணவு வகைகளை சமைத்துக் காட்டி விருந்து படைத்தது விருதுநகரில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா.
இயற்கை நலவாழ்வுச் சங்கம், விஎம்.ஞானசபாபதி - சரஸ்வதி சாரிட்டீஸ் டிரஸ்ட் இணைந்து நடத்திய சிறுதானிய உணவுத் திருவிழா விருதுநகரில் நடை பெற்றது. சிவகாசி இயற்கை வேளாண்மை நம்மாழ்வார் நல வாழ்வு மைய உணவியல் வல்லுநர் மாறன்ஜீ மற்றும் ஆ.சா.ரமேஷ், அமிர்தவள்ளி குழுவினர் கலந்துகொண்டு வழக்கத்தில் நாம் மறந்த சிறுதானிய உணவு வகைகளை சமைத்துக் காட்டினர்.
விழிப்புணர்வுத் திருவிழா
ஊட்டச்சத்துகளும் மருத்துவ நற்குணங்களும் நிறைந்த சிறுதானி யங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, கொள்ளு, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்றவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதுபோன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் சுவைமிகுந்த உணவுப் பொருள்களை மீட்டு ருவாக்கம் செய்து, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதும் இந்தத் திருவிழாவின் நோக்கம் என்று அவர்கள் தெரிவித் தனர்.
விழாவில் தினைப் பாயாசம், சாமை அரிசி, தயிர் சாதம், வரகரிசி புலாவ், கம்பு லட்டு, குதிரைவாலி பிரியாணி, மாப்பிள்ளை சம்பா கொழுக்கட்டை, கேழ்வரகுப் புட்டு, இரும்புச் சோளம் கஞ்சி, பனிவரகு, சாம்பார் சாதம் போன்றவை சமைக் கப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டன.
இச்சிறுதானிய உணவுகளில் சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய மாவுச் சத்துக்கள் இல்லாததால், அந்த நோய் வராமல் தடுப்ப தற்கும், சர்க்கரை நோயாளிகளுக் கும் சத்து நிறைந்த அவை சிறந்த உணவாக இருக்கும். சிறுதானியங்கள் உடல் ஆரோக் கியத்தைப் பேண உதவுவதாகவும், நோய் வந்தால் விரைவாக குணப்படுத்த உதவுவதாகவும் இயற்கை நலவாழ்வுச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் நெல் அரிசியைப் போலவே சிறுதானிய அரிசி, தினை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றைப் பயன்படுத்தி சாப்பாடு, தயிர்சாதம், நெய்சாதம், கூட்டாஞ்சோறு, எலுமிச்சை சாதம், இட்லி, தோசை, பொங்கல், புட்டு போன்றவை சமைக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
அதோடு, வரகு கறிவேப்பிலை சோறு, சாமை கூட்டாஞ்சோறு, கேழ்வரகு இட்லி, சுண்ணாம்புச் சத்து நிறைந்த கேழ்வரகு அல்வா, சாமை கார புட்டு, சாமை தட்டை, வரகு முறுக்கு, குறையாத நார்ச்சத்துக்கு வரகு அதிரசம், குழந்தைகள் ருசித்து உண்ணும் வகையில் கொள்ளு லட்டு தயாரிப்பு, கொழுப்பைக் குறைக்கும் கொள்ளுச்சாறு, சாமை கிச்சடி, உடலுக்கு வலுகொடுக்கும் குதிரைவாலி கேசரி, நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் சாமை மிளகுப் பொங்கல், தினை மாவு பாயாசம், சுவை நிறைந்த வரகுப் பொங்கல், ஜீரணசக்தியை அதிகரிக்கும் சாமை மசாலா முறுக்கு, குறுந்தானிய கட்லெட், குளிர்ச்சியூட்டும் கம்பு பணியாரம் தயாரிக்கும் வகைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
உணவுக் கட்டுப்பாடு
மேலும், கனிகளை முதல் உணவாகவும், அடுத்து காய்கறி களையும், பிறகு தானிய வகை களையும் உண்பது நல்லது என்றும், ஒருவேளைக்கு ஒருவகை உணவு மட்டும் உண்பதே மிகச்சிறந்தது என்றும் வந்திருந்தவர்களுக்கு அவர் கள் அறிவுறுத்தினர். அத்துடன், மனச்சிக்கலுக்குக் காரணம் மலச் சிக்கலே, மூட்டுவலிக்கு புற்றுமண் பட்டி போடுவோம், தினசரி இருமுறை குளிப்போம், மழைநீரை குடிநீர் ஆக்குவோம், மரம் வளர்ப்போம், மண்வளம் காப்போம், மாடிவீட்டுத் தோட்டம் அமைப்போம், காலை காபி அல்சரின் தொடக்கம், கனிகளை உண்க- பிணிகளை நீக்குக என்ற ஆரோக்கியமான வாழ்வுக்கான பொன்மொழிகளின் அர்த்தங்களையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
 
 

பாரம்பரிய உணவுகள்


மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம். நமது முன்னோர்கள் வழி நல்ல சோறு வகைகள் பற்றி காண்போம்.

  பாரம்பரிய சோறு-வகைகள்



 உணவு பட்டியல்- 1
கொள்ளு சாறு
தினை இனிப்பு பெ¡ங்கல்
சிறுதானிய இட்டவி
நிலக்கடலை துவையல்
வரகு - சாம்பார் சோறு
சாமை-தயிர் சோறு
சுரக்காய் கூட்டு

 உணவு பட்டியல்-  2
  வாழைத் தண்டு சாறு
தினை பாயசம்
வரகு- கருவேப்பிலைச் சோறு
சாமை- மிளகு சோறு
சிறுதானிய அடை
பீற்கன்காய் துவையல்
பூசனிக்காய் கூட்டு




உணவு பட்டியல்- 3
முடக்கத்தான் ரசம்
தேங்காய் தினை இனிப்பு
வரகு-எள்ளுசோறு
கூட்டாஞ் சோறு
சிறுதானிய பனியாரம்-காரம்
தேங்காய் துவையல்
கத்தரிக்காய் மசியல்

உணவு பட்டியல்- 4


தூதுவாளை ரசம்
தேனும் தினைமாவும்
வரகு- கருவேப்பிலைச் சோறு
சாமை-தயிர் சோறு
நவதானிய புட்டு
நாட்டுகாய்கறிகள் கூட்டு



 உணவு பட்டியல்- 5


பிரண்டை ரசம்
   தினை இனிப்பு பொங்கல்
வரகு- மல்லி சோறு
கூட்டாஞ் சோறு
சோளப் பனியாரம்-கரம்
நிலக்கடலை துவையல்
பரங்கிக்காய் ˜ட்டு
உணவு பட்டியல்-  6

கொள்ளு சாறு
சாமை பாயசம்
வரகு-நிலக்கடலை சோறு
சாமை-எள்ளு சோறு
கேழ்வரகு புட்டு
உப்பு பருப்பு



உணவு பட்டியல்- 7


வாழைத் தண்டு சாறு
தினை பாயசம்
மாப்பிள்ளை சம்பா சாம்பார் சோறு
வரகு-எள்ளுசோறு
கம்பு அடை
புளிச்சைக் கீரை துவையல்
கலவைக்காய் கூட்டு




மாலை - சிற்றுண்டி வகை
சூடான குடிப்பு வகை
Ø  சுக்கு தண்ணி
Ø  மல்லி தண்ணி
Ø  சுக்குமல்லி தண்ணி
Ø  இஞ்சி தண்ணி
Ø மூலிகை தண்ணி


சிறு உணவு வகை
Ø சிவப்பு அவல் பிரட்டல்
Ø வெள்ளை அவல் பிரட்டல்
Ø சிறுதானிய அவல் பிரட்டல்
Ø நவதானிய கொழுக்கட்டை
Ø இனிப்பு புட்டு
Ø கார புட்டு
Ø சுண்டல் வகைகள் (காராமணி,பாசிப்பயறு,நிலக்கடலை,கொண்டக்கடலை)
Ø நவதானிய அடை
Ø கீரை அடை
Ø நவதானிய உருண்டை
Ø தேனும் தினைமாவும்
Ø சிறுதானிய முறுக்கு
Ø சிறுதானிய அதிரசம்
Ø பால் கொழுக்கட்டை
Ø நெய் புட்டு
Ø கம்பு இனிப்பு
Ø சிறுதானிய பனியாரம்-கரம்
Ø சிறுதானிய பனியாரம்-இனிப்பு
Ø வெந்நையக்களி
Ø தேங்காய்பால் கஞ்சி
Ø எள்ளு மாவு

புதன், 13 மே, 2015

நோய் கணிப்பு முறைகள்

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம்.
 நோய் கணிப்பு முறைகள்:
ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித் மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம்.
நாடி எப்படி உண்டாகிறது?
நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான்.  அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.
நாடி பார்க்கும் முறை:
 மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்) ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும். பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும், தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
நாடி நிதானம்;
மேலே சொன்னபடி நாடி பார்க்கும் போது ஆள்காட்டி விரல் மூலம் கீழ்வாத நாடி, நடு விரல் மூலம் கீழ் பித்த நாடி, மோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி ஆகியவற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இவை தவிர பூத நாடி, குரு நாடி என இரு நாடிகள் உண்டு. பெருவிரல் மற்றும் சுண்டு விரல் மூலம் பூத நாடியையும், ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் உணரலாம்.

எவ்வித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால், அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும். பித்த நாடி ஆமை மாதிரியும், அட்டை மாதிரியும், சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும், தவளை மாதிரியும் நடக்கும்.
ஆண்-பெண் நாடி பார்க்கும் முறை:
ஆண்களுக்கு வலக் கையிலும் பெண்களுக்கு இடக் கையிலும் நாடி பார்ப்பதுதான் சிறந்தது.

பத்துவகை நாடிகள்:
1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.
2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.
3. சுழிமுனை எனப்படும் ஐய நாடி
4. சிங்குவை எனப்படும் உள்நோக்கு நாடி
5. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.
6. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி
7. அத்தி எனப்படும் வலச் செவி நாடி
8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.
9. அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.
10. குருநாடி எனப்படும் எரு வாயில் நாடி.

நாடி பார்க்கும் மாதங்கள்:
சித்திரை, வைகாசி-காலை (உதயம்)
ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை -நண்பகல்
மார்கழி, தை , மாசி - மாலை
ஆவணி, புரட்டாசி, பங்குனி - இரவு
உடலுறவு கொண்டவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் வாகனம் ஓட்டியதால் களைப்படைந்தவர்கள், வயிறு நிறைய சாப்பிட்டவர்கள், மழையில் நனைந்தவர்கள், அடிக்கடி விக்கல் எடுப்பவர்கள், நாட்டியம் ஆடியவர்கள், மூச்சுப் பயிற்சி செய்தவர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்தவர்கள், பயந்த சுபாவம் உடையவர்கள், விஷம் சாப்பிட்டவர்கள், அதிகமாக கவலைப் படுபவர்கள், அதிகப் பசி உடையவர்கள், பூப்படையும் வயதில் உள்ள பெண்கள், அதிகமாகக் கோபப்படுவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், நோன்பு விரதம் இருப்பவர்கள் மற்றும் வேறு சிலருக்கும் தெளிவாக நாடி பார்க்க முடியாது.

நாடிகளின் தன்மை:

வாத நாடி
வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும். வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும் ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.
அறிகுறிகள்:
உடல் குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல் கொஞ்சமாகவும் வெளியாகும்.
பித்த நாடி
பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு,காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம், குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள் உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
அறிகுறிகள்:
உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும் வெளியாகும்.
சிலேத்தும நாடி:
சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து நடுங்கும்,  உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு, வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சு மற்றும் விலாப்பகுதியில் வலி இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர் குறைவாகப் போகும்.
உடல் அறிகுறிகள்:
உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.

மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:
தலையில்                     15000
கண்களில்                     4000
செவியில்                      3300
மூக்கில்                          3380
பிடரியில்                       6000
கண்டத்தில்                   5000
கைகளில்                       3000
முண்டத்தில்                 2170
இடையின் கீழ்              8000
விரல்களில்                   3000
லிங்கத்தில்                    7000
மூலத்தில்                       5000
சந்துகளில்                     2000
பாதத்தில்                        5150
மொத்தம்                       72000

நோய்களின் பட்டியல்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
அகத்தியர் ரத்தின சுருக்கம் என்ற சித்த மருத்துவ நூலில் 62 வகை நோய்களின் அடிப்படையில், மனிதர்களுக்கு 4448 வகையான நோய்கள் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.
1. வாத நோய்                         84
2. பித்த நோய்                        42
3. சிலேத்தும நோய்            96
4. தனூர் வாயு                       300
5. கண் நோய்                        96
6. காச நோய்                          7
7. பெரு வயிறு                      8
8. சூலை நோய்                    200
9. பாண்டு                              10
10. சிலந்தி நோய்               60
11. குன்மம்                             8
12. சந்தி நோய்                    76
13. எழுவை (கழலை)
நோய்                                     95
14. சுர நோய்                        64
15. மகோதரம் நோய்          7
16. தலையில் வீக்கம்        5
17 உடம்பு வீக்கம்              16
18. பிளவை நோய்               8
19. படுவன்  நோய்             11
20. தொப்புள் நோய்              7
21. பீலி நோய்                         8
22. உறுவசியம்                      5
23. கரப்பான் நோய்              6
24. கெண்டை நோய்          10
25. குட்ட நோய்                    20
26. கதிர் வீச்சு நோய்             3
27. பல்-ஈறு நோய்                  6
28. சோகை                             16
29. இசிவு                                   6
30 மூர்ச்சை                             7
31. சூலை நோய்                  48
32. மூலம்                                9
33. அழல் நோய்                  10
34. பீனிசம்                             76
35. நஞ்சுக் கடி                      76
36. நாக்கு-பல் நோய்         76
37. கிரகணி நோய்              25
38. மாலைக் கண்                20
39. அதிசாரம்                         25
40. கட்டி                                  12
41. கிருமி நோய்                    6
42. மூட்டு நோய்                  30
43. முதிர்ந்த கீல் நோய்     20  
44. கக்கல் (வாந்தி) நோய்   5
45. கல் அடைப்பு                   80
46. வாயு நோய்                      90
47. திமிர்ப்பு நோய்                10
48. விப்புருதி                           18
49. மேக நீர்                              21
50. நீர் நோய்                              5
51. நஞ்சுவாகம்                    16
52. செவி நோய்                    10
53. விக்கல்                             10
54. அரோசிகம்                        5
55. மூக்கு நோய்                  10
56. கடிநஞ்சு                          500
57. காயம், குத்து வெட்டு 700
58. கிரந்தி                                 48
59. பறவை நஞ்சு நோய்   800
60. புறநீர்க் கோவை           200
61. உதடு நோய்                    100
62. பிள்ளை நோய்               100

ஞாயிறு, 3 மே, 2015

சித்த மருத்துவம்-01

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.சித்த மருத்துவம் பற்றி அறிந்துகொள்வோம்.

 
         சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.
சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன.