மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு .வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
பெற்றோர்களே,உங்களது சிந்தனைக்கு சில தகவல்கள்.
பெற்றோர்கள் வழிகாட்டுதலில் அக்கறை கொண்டவர்களாக மாற வேண்டும்.மாணவர்கள்,நம் குழந்தைகள்,தனக்கு தெரியாத ஒன்றிலிருந்து எதையும் தேர்ந்தெடுக்க முடியாது.
பொதுவாக தற்போது என்னென்ன தொழில்கள் உள்ளன?அதில் உபதொழில்கள் என்னென்ன உள்ளன?அதற்கு தேவையான கல்வித்தகுதி என்ன?பயிற்சி என்ன?தகுதி என்ன?இவற்றை எவ்வாறு அறிந்துகொள்வது?
இது போன்ற தகவல்களை சேகரித்து தெரிந்துகொள்ள வேண்டும்.வேகமான அறிவியல்,தொழில்நுட்ப மாற்றங்களால் நாட்டின் சமுதாய மற்றும் பொருளாதார வடிவங்கள் மாற்றம் அடைந்து வருகின்றன.
இம்மாற்றங்களினால் பல்வேறான திறமைகள்,ஆற்றல்கள் உள்ள பணியாட்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால் தற்போது வேலைவாய்ப்புகளுக்கும் தனி மனிதனுடைய திறமைகளுக்கும் இடைவெளி ஏற்பட்டு வருகின்றன.எனவே,நடைமுறைப்பயன்பாட்டிற்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புத்தகவல்கள் அவசியம் அறிந்து தம் குழந்தைகளுக்கு,மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.வகுப்பறை கலந்துரையாடல், தொழில் கலந்துரையாடல்,தொழில்மாநாடு,தொழில் கண்காட்சி,தொழில் தகவல்கள் பற்றிய சிறுபடக்காட்சி போன்றவற்றிற்கு கலந்துகொள்ள போதுமான ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும்.
வழிகாட்டல் என்பது ஒரு குறிப்பிட்ட வயதில் முடிக்கக்கூடிய எல்லைப்பரப்பு இல்லைங்க.தனியாளின் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய செயல்முறையாகும்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் இருக்கக்கூடியவர்கள்.சில நேரங்களில் அறிவுரை கூறுபவர்,உடலியல் நிபுணர்,உளவியல் நிபுணர்,மனவியல் நிபுணர்,பாடத்திட்ட வல்லுனர், தொழில் வழிகாட்டுபவர்,போன்ற சிறப்பு நிபுணர்களும் தேவைப்படுகின்றனர்.
இன்றைய உலகம் தற்போது மிகவும் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது.எனவே,இன்றைய இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் கல்வி,தொழில் மற்றும் தனிப்பட்ட ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
கல்வி மற்றும் தொழில் சார்ந்த அமைப்புகள் நேரத்திற்கு நேரம் மாறக்கூடியவை.தொழில் அமைப்புகள்,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உபயோகங்கள் ,நாட்டின் பொருளாதார அமைப்புகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன.
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் எது தனக்கு பொருத்தமானது? என்று அறிந்து தேர்ந்தெடுக்க இன்றைய இளைய சமூகத்தினர் தடுமாறுகின்றனர்.
வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன.ஆனால் வேலைகளை தவறான வழியில் தேர்ந்தெடுக்கப்படுவதால் மனித வளம் வீண்டிக்கப்படுவதுடன் இளைய சமுதாயமும் வாழ்க்கையின்மீது வெறுப்படைந்து தடம் மாறி! தம் வாழ்க்கையை பாழ்படுத்தும் சூழலையும் உருவாக்கிக்கொள்கின்றனர்.போதை பொருட்கள் போன்ற தீங்குகளுக்கு ஆளாகின்றனர்.
என,
சமுதாய நலனில் அக்கறை கொண்ட,
உங்கள் ஓட்டுனர்,
பரமேஸ்வரன்.C,
தாளவாடி,
ஈரோடு மாவட்டம்.
http://konguthendral.blogspot.com
வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு .வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
பெற்றோர்களே,உங்களது சிந்தனைக்கு சில தகவல்கள்.
பெற்றோர்கள் வழிகாட்டுதலில் அக்கறை கொண்டவர்களாக மாற வேண்டும்.மாணவர்கள்,நம் குழந்தைகள்,தனக்கு தெரியாத ஒன்றிலிருந்து எதையும் தேர்ந்தெடுக்க முடியாது.
பொதுவாக தற்போது என்னென்ன தொழில்கள் உள்ளன?அதில் உபதொழில்கள் என்னென்ன உள்ளன?அதற்கு தேவையான கல்வித்தகுதி என்ன?பயிற்சி என்ன?தகுதி என்ன?இவற்றை எவ்வாறு அறிந்துகொள்வது?
இது போன்ற தகவல்களை சேகரித்து தெரிந்துகொள்ள வேண்டும்.வேகமான அறிவியல்,தொழில்நுட்ப மாற்றங்களால் நாட்டின் சமுதாய மற்றும் பொருளாதார வடிவங்கள் மாற்றம் அடைந்து வருகின்றன.
இம்மாற்றங்களினால் பல்வேறான திறமைகள்,ஆற்றல்கள் உள்ள பணியாட்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால் தற்போது வேலைவாய்ப்புகளுக்கும் தனி மனிதனுடைய திறமைகளுக்கும் இடைவெளி ஏற்பட்டு வருகின்றன.எனவே,நடைமுறைப்பயன்பாட்டிற்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புத்தகவல்கள் அவசியம் அறிந்து தம் குழந்தைகளுக்கு,மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.வகுப்பறை கலந்துரையாடல், தொழில் கலந்துரையாடல்,தொழில்மாநாடு,தொழில் கண்காட்சி,தொழில் தகவல்கள் பற்றிய சிறுபடக்காட்சி போன்றவற்றிற்கு கலந்துகொள்ள போதுமான ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும்.
வழிகாட்டல் என்பது ஒரு குறிப்பிட்ட வயதில் முடிக்கக்கூடிய எல்லைப்பரப்பு இல்லைங்க.தனியாளின் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய செயல்முறையாகும்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் இருக்கக்கூடியவர்கள்.சில நேரங்களில் அறிவுரை கூறுபவர்,உடலியல் நிபுணர்,உளவியல் நிபுணர்,மனவியல் நிபுணர்,பாடத்திட்ட வல்லுனர், தொழில் வழிகாட்டுபவர்,போன்ற சிறப்பு நிபுணர்களும் தேவைப்படுகின்றனர்.
இன்றைய உலகம் தற்போது மிகவும் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது.எனவே,இன்றைய இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் கல்வி,தொழில் மற்றும் தனிப்பட்ட ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
கல்வி மற்றும் தொழில் சார்ந்த அமைப்புகள் நேரத்திற்கு நேரம் மாறக்கூடியவை.தொழில் அமைப்புகள்,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உபயோகங்கள் ,நாட்டின் பொருளாதார அமைப்புகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன.
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் எது தனக்கு பொருத்தமானது? என்று அறிந்து தேர்ந்தெடுக்க இன்றைய இளைய சமூகத்தினர் தடுமாறுகின்றனர்.
வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன.ஆனால் வேலைகளை தவறான வழியில் தேர்ந்தெடுக்கப்படுவதால் மனித வளம் வீண்டிக்கப்படுவதுடன் இளைய சமுதாயமும் வாழ்க்கையின்மீது வெறுப்படைந்து தடம் மாறி! தம் வாழ்க்கையை பாழ்படுத்தும் சூழலையும் உருவாக்கிக்கொள்கின்றனர்.போதை பொருட்கள் போன்ற தீங்குகளுக்கு ஆளாகின்றனர்.
என,
சமுதாய நலனில் அக்கறை கொண்ட,
உங்கள் ஓட்டுனர்,
பரமேஸ்வரன்.C,
தாளவாடி,
ஈரோடு மாவட்டம்.
http://konguthendral.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக