வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஆணவம் அழிந்தது.....

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.
                    பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,"அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார்.

                அர்ச்சுணனோ       "மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? '' என்றார்.

                அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. "தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன்....

      வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.
அப்போது அவர்," தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!'' என்றார் அதட்டலுடன்!

             அர்ஜூணனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

  இதனால் வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது.
                   ஒன்றும் புரியாதவனாய்  அரச்சுணனும் தேரைவிட்டு  தள்ளி நின்றான்.

         வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர்,

          தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார். அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.

        "பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!,'' என்றார் புன்முறுவலுடன்.

"தேர் ஏன் எரிந்தது?" அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.

"அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால்,

        அவை வலிமையற்றுக் கிடந்தன.தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்துஅனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.உண்மை இப்படி இருக்க,
              நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.

வெற்றி பெற்றதும்
  "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே,''
  என்று அறிவுரை கூறினார்.

          தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !

சைனஸ் பிரச்சினைக்கு மருந்து.





மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். சளிப்பிரச்சினையா?

சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்...
* ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.
* தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
* தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க் கோர்வை போன்றவை சரியாகும்.
* குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.
* கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும்முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட்போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவவேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலை பாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்.
இந்த இயற்கை முறைகளை பின்பற்றி சைனஸ்-ஆல் வரும் பிரச்சனையை வீட்டிலேயே சரிசெய்யலாம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

சசிபெருமாள் வாழ்க்கை வரலாறு



மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். காந்தியவாதி சசிபெருமாள் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றி காண்போம். 



             மறைந்த காந்தியவாதி சசிபெருமாளின்(வயது59) சொந்த ஊர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை அருகே உள்ள இ.மேட்டுக்காடு கிராமம் ஆகும். இவர் 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி கந்தசாமி-பழனியம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார். இவரது முதல் மனைவி சசிகலா பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு விவேக் (வயது 40), நவநீதன் (38) என்ற 2 மகன்கள் உள்ளனர். 2-வது மனைவி பெயர் மகிளம் (45). இவருக்கு கவியரசி (11) என்ற மகள் உள்ளாள்.

இவர்களில் விவேக் சேலம் இரும்பாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நவநீதன் தறித்தொழிலாளி ஆவார். இவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மகள் கவியரசி 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் 8-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இருந்தபோதும், மேற்கொண்டு படித்து மரபுவழி மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்றை நடத்தி வந்தார். அதன்மூலம் கிராம மக்களுக்கு யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சைகளை அளித்து வந்தார்.

மகாத்மா காந்தி மீது அளவுகடந்த பற்று கொண்டிருந்த இவர் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதனால் தனது 16 வயதிலேயே பூரண மதுவிலக்குக்கோரி, கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். காந்திய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட இவர் கிராமங்கள்தோறும் சென்று அடிப்படை வசதிகளை மேற்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். பின்னர் ‘சுதந்திர தேசம்’ என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தினார். போதிய நிதி வசதி இல்லாததால் அவரால் அந்த பள்ளியை மேற்கொண்டு நடத்த முடியவில்லை.

சசிபெருமாள், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற தனது பிரதான கோரிக்கையை முன்நிறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இவரது போராட்டம் தீவிரம் அடைந்தது. இதற்காக அவர் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறி வந்தார்.

உண்ணாவிரதம், நடைபயணம், ஆர்ப்பாட்டம் என்று மதுவிலக்குக்காக தனி ஒரு மனிதராக நின்று இவர் தனது போராட்டங்களை தொடர்ந்தார். இதன் உச்சமாக பொதுமக்களின் காலில் விழுந்து மது குடிக்க வேண்டாம் என்றும், மதுவிலக்கை அமல்படுத்த உதவுமாறும் கேட்டுக்கொண்டார். எப்படியாவது மதுவிலக்கை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த சசிபெருமாள் தற்போது நம்மிடம் இல்லை. மதுவிலக்கு போராட்ட களத்திலேயே அவர் உயிர் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி; மாலை மலர் 01.08.2015